வெளிநாடொன்றில் துன்புறுத்தலுக்கு உள்ளான இலங்கை பெண்கள் நாட்டை வந்தடைந்தனர்!

வெளிநாட்டில் பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் நோய் நிலைகளுக்கு உள்ளான 47 பணிப்பெண்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் காலை (25-01-2023) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். மஸ்கட் நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.230 என்ற விமானத்தில் வந்தடைந்தவர்களில் 40 பேர் வீட்டு பணிப்பெண்கள் என தகவல் தெரியவந்துள்ளது.